அன்பு
சகோதரர் ஸ்ரீகண்டன் இயக்கும் இரண்டாவது திரைப்படம் மூலம் திரை எழுத்தாளராக
அறிமுகமாகிறேன். திரைக்கதையில் முக்கியமான ஒரு பகுதியிலும், படத்திற்கான
வசனத்திலும் பணிபுரிந்துள்ளேன். என்மீது நம்பிக்கைக்கொண்டு வாய்ப்பளித்த
இயக்குனருக்கு நன்றி. கிட்டத்தட்ட இரு வருடங்களுக்கு முன் ஒரு மாலையில் நான்கு
சுவர்களுக்குள் படத்தின் கரு உருவானது. அது மெல்லமெல்ல வளர்ந்து தற்போது படப்பிடிப்பு
தொடங்கியுள்ளது.
திரைக்கதைக்காக
எவ்வளவு மெனக்கெடல் நிகழ்த்த வேண்டும், எவ்வளவு அற்பணிப்பு வேண்டும் என்று எனக்கு கற்றுத்தந்த
மதிப்பிற்குரிய எழுத்தாளர்கள் திரு.சுபா அவர்களை நன்றியோடு நினைவுக்கூர்கிறேன்.
ஆர்வத்தையும், அற்பணிப்பையும் தகுதியாகக்கொண்டு எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி நாள் முழுவதையும் ஒதுக்கி, மதிய உணவுடன் திரைக்கதை
வகுப்பெடுத்தனர். நன்றி சார்.
படர்ந்து
விரிந்திருந்த கதையை செதுக்கியவர் திரைக்கதை எழுத்தாளர் திரு.சாப் ஜான்(சாணக்யன்,
குணா, சில்லுன்னு ஒரு காதல் உள்ளிட்ட படங்களின் முதன்மை எழுத்தாளர்). அவருக்கும்
குழு சார்பாக நன்றிகள்.
சினிமா
ஒரு பெரும்வணிகம் என்பதால் அதற்கேற்றார்போல் எக்கச்சக்கமான தடைகள் இருந்தன. தடைகளிலிருந்து மீள, எந்த கோடாரி வெட்டும் படாத,
சுற்றி பள்ளம் எதுவும் தோண்டாத பவோபாப் மரத்தை சரித்து போடுவதற்கு இணையான சிரமம்
இருந்தது. அதற்கு அதீத நிதானம் தேவைப்பட்டது. நாங்கள் சற்று தளர்ந்தபோதும் வடத்தை
பிடிநழுவாமல் நின்று இயக்குனர் பார்த்துக்கொண்டார். இயக்குனருக்கு வாழ்த்துக்கள்..!
Vazhthukkal...👏
ReplyDeleteநன்றி .. :)
Deleteவாழ்த்துக்கள் பாசில்... மேலும் பல திரைப்படங்களில் பணிபுரியவும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றி ��
ReplyDeleteகுழுவில் இருந்து முதல் சேதி! மீண்டும் வாழ்த்துகள், சகோ. :)
ReplyDelete